நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு அழைப்பாணை விடுப்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் 29ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (13) அறிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சருக்கு எதிராக இரண்டு சட்டத்தரணிகள் முன்வைத்த இரண்டு மனுக்களை நீதிபதிகள் முன்னிலையில் பரிசீலித்ததன் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.