அட்டாளைச்சேனை, பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பு அமைந்துள்ள பொலிஸ் வீதித்தடையில் , பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளது,
பொலிஸ் தடுப்பு பகுதி உடைக்கப்பட்டு, காவலரணுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரியவருவதாவது பாலமுனை காவலரணை கடக்க முற்பட்டஇரு இளைஞர்களில் பின்னால் இருந்த இளைஞர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை.
இதனை அவதானித்த கடமையில் இருந்த ஓம்காட் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார்.
அவர்கள் நிற்காமல் சென்றதாக கூறி துப்பாக்கியினால் அடித்து தாக்கியுள்ளனர்.
இதனால் தலைக்கவசம் அணியாமல் சென்ற இளைஞருக்கு பலமான காயம் ஏற்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.