இலங்கையினை மீண்டும் பலப்படுத்துவதற்காக தான் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து இயங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
“மிகவும் பிரச்சினையான இந்த சூழ்நிலையில் நமது நாட்டினை வழிநடத்தும் சவாலான இப்பணியை முன்னெடுத்துச் செல்ல புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு. இலங்கையை மீண்டும் வலிமையாக்க பிரதமருடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பாக்கின்றேன்” என ஜனாதிபதி தனதுஉத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.