முன்னாள் பிரதமர்களான மஹிந்த ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, ரமேஷ் பத்திரன மற்றும் நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9ஆம் திகதி அலரிமாளிகையில் இருந்து கோத்தா கோ கிராமத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே குறித்த குழுவினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் எதிர்வரும் புதன்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள அதேவேளை,
அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி நாளை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கோட்டா கோகம மீது தாக்குதல் நடத்துவதற்கு வடரேக சிறைச்சாலையின் கைதிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே கமாண்டர் நிஸ்ஸங்க அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும், பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.