கொழும்பு கோட்டை பஸ்டியன் மாவத்தை பஸ் டிப்போவிற்கு அருகில் இன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இனந்தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து குறித்த அவ் இடத்தில் துப்பாக்கிச் சூடுடினை நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.