ரயில்வே தொழிற்சங்கங்கள் உடனடியாக வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.
ரயில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் என்ஜின் டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புகையிரத ஊழியர்களுக்கு பணிக்கு வருவதற்கு எரிபொருள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காலையில் இயக்கப்படவிருந்த சுமார் 30 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் பணியிடங்களுக்கு வர முடியாத நிலையே இதற்குக் காரணம் என தெரியவருகின்றது.