இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி இலங்கையின் அபிவிருத்திக்காகவும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே தூதுவர் இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையுடனான பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகள் தொடர்ந்தும் பேணப்படும் என ஜப்பானிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவுக்கு ஜனாதிபதி தனது நன்றியை தூதுவருக்கு தெரிவித்ததாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.