வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று திறக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தின் ஐந்து நாட்களும் இந்தப் பகுதி திறந்திருக்கும்.
தூதரக சேவைகளுக்கான பெரும் தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலுள்ள பிராந்திய தூதரக அலுவலகங்களும் அடுத்த வாரம் வழமை போன்று திறக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.