டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் செல்லும் 03 கப்பல்கள் எதிர்வரும் தினங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக சிலோன் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜுலை மாதம் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையில் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜூலை 29 மற்றும் 31 மற்றும் ஆகஸ்ட் 10 மற்றும் 15 க்கு இடையில் மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.