இலங்கை மின்சார சபையின் இரண்டு பிரதான பொறியியலாளர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் மற்றும் நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலையில் டீசல் அனல்மின் நிலையங்களைப் பயன்படுத்தியமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் ஆரம்பக்கட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.