கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 09 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட ஐந்து பெண்களும் நான்கு ஆண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.