குழந்தைகளின் கற்றல் பற்றி பேச அனைவரும் தயார்
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பிள்ளைகள் இழக்கும் கற்றல் நேரத்தை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க கல்வித்துறையின் அனைத்து நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழில்சார் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (08) கல்வி அமைச்சில் கூடுகின்றனர்.
இக்கலந்துரையாடலில் தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைகள் திணைக்களம் மற்றும் கல்வி வெளியீடுகள் திணைக்களத்தின் தலைவர்கள் கலந்துகொள்வதுடன், அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தக் கலந்துரையாடலைக் கூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போதுள்ள சூழ்நிலையின் காரணமாக பிள்ளைகளின் கற்றல் நேரத்தை இழப்பதற்கு முன்வைக்கக்கூடிய தீர்வுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், களத்திலுள்ள அனைத்து நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துரையாடல் ஒன்றை நடத்துவது பொருத்தமானது என தொழிற்சங்க கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.