எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்று முதல் வீட்டில் இருந்தே பணியாற்ற கிராம அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். கிராம உத்தியோகத்தர்களுக்கு எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்தும் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கமல் கித்சிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுகாதார ஊழியர்களுக்கு கூட எரிபொருள் வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டிருந்த இன்றைய தினத்தை 48 மணிநேரத்திற்கு ஒத்திவைக்க சுகாதார அமைச்சு நேற்று தீர்மானித்துள்ளது. தொடர்புடைய திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கான புதிய திகதி அறிவிக்கப்படும்.