முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக கடமையாற்றிய பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.
நெத் நியூஸிடம் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தமக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்ததாகவும், தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்காத தாம் இனி பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவது நெறிமுறையல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வர்த்தகர் தம்மிக்க பெரேரா தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.