பிரித்தானிய பாராளுமன்றத்தின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து அந்நாட்டு ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைதியான போராட்டம், பத்திரிகை சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் சட்டம் குறித்தும் அங்கு விவாதிக்கப்பட்டதாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள சவால்களுக்கு மத்தியில் இலங்கைக்கு ஆதரவை வழங்க பிரித்தானியா தயாராக இருப்பதாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட் தனது டுவிட்டர் தளத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.