நூருல் ஹுதா உமர்
மருதமுனை ஹவுஸ் ஒப் இங்கிலிஸ் பாடசாலையின் மாணவர்களின் திறமைக்கு வழிகாட்டும் நோக்கிலான நிறங்களின் தினமும் பெருநாள் ஒன்று கூடலும் மருதமுனை கலாசார மண்டபத்தில் பாடசாலையின் பணிப்பாளர் சுமைய்யா ஜெஸ்மி தலைமையில் நடைபெற்றது
கனடா பல்கலைக்கழக வருகை தர விரிவுரையாளரும் பொறியியலாளருமான ஹுமைட் றசூல் நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்க தலைவர் ஜெஸ்மி மூஸா உட்பட பலரும் அதிதியாக கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.