இலங்கை மிகவும் இக்கட்டான தருணத்தில் இருப்பதால் அனைவரது ஆதரவையும் எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உலக அமைதி அமைப்பின் தலைமையிலான “சர்வதேச தலைமைத்துவ உச்சி மாநாடு 2022” தொடக்க விழாவில் அவர் தலைமை உரை ஆற்றினார்.
பிலிப்பைன்ஸின் மணிலாவில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
உலக உணவுத் திட்டத்தின் தரவுகளின்படி இலங்கையில் 06.3 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்குவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எனவே அனைவரது ஆதரவையும் எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இந்த சர்வதேச மாநாட்டில் பல வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பெறக்கூடிய ஆதரவு குறித்து கலந்துரையாட உள்ளதாக மைத்திரிபால சிறிசேன வெளிநாடு செல்வதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.