போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்காக அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என்றும் நாட்டின் அன்றாட விவகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே அமுல்படுத்தப்பட்டதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொஸ்கம பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொஸ்கம போரகொடவில் அமைந்துள்ள தனது தந்தை பிலிப் குணவர்தனவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பிரதமர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.