இரண்டு அரச உர நிறுவனங்களின் ஊடாக இரசாயன உரங்களை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு சலுகை மற்றும் நியாயமான விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் பின்னர் சந்தையில் இரசாயன உரங்களின் விலை குறையும் என்றும் அமைச்சர் கூறினார்.
தனியார் துறை நிறுவனங்கள் உரங்களை இறக்குமதி செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டார்.
உரங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப உர விலை நிர்ணயம் செய்வதில் விவசாயிக்கு எந்த வித அநீதியும் ஏற்படாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.