பாணந்துறை பிரதேசத்திற்குள் தனியாக வசிக்கின்ற வயோதிப பெண்களினை இலக்கு வைத்து, பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து வந்த திட்டமிட்டப்பட்ட குறித்த கும்பலினைச் சேர்ந்த சந்தேகநபர்களை பாணந்துறை தெற்கு காவல்துறையினர் கைது செய்தனர்.
பகலில் யாசகர்களாக வீடுகளுக்கு சென்று நோட்டமிடும் இவர்கள், இரவில் முகமூடி அணிந்தும் கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி கதவுகளினை உடைத்து குறித்த வீடுகளை கொள்ளையிட்டு வந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருட்கள்மற்றும் சுமார் 2 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் இலத்திரனியல் பொருட்கள் மற்றும் கொள்ளைபடிப்பதற்கு பயன்படுத்திய கூறிய ஆயுதங்கள் என்பவற்றியும் காவல்துறையினர் கைப்பற்றியிருக்கின்றனர்.