இரண்டு எரிவாயு ஏற்றுமதிகளில் ஒன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக விட்ரா கேஸ் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
3,700 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு கப்பலானது இன்று நாட்டை வந்தடையும் என அவர்கள் தெரிவித்தார்.
மேலும்,இரண்டாவது எரிவாயு கப்பல் வியாழன் (19) வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகின்றதாகவும்குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், வீட்டுத் தேவைகளுக்கு வழங்குவதற்கு எரிவாயு இல்லாத நிலையில் மக்கள் வரிசையில் நிற்பது தற்போதைய நிலைமைக்கு பொருந்தாத காரியம் என லிட்ரோ கேஸ் நிறுவனம் சுட்டி காட்டியுள்ளது.