SLPP மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம கொழும்பில் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
கோட்டகோகம எதிர்ப்பாளர்களை தாக்குவதற்காக தான் காலி முகத்திடலுக்கு சென்றதாக மஹிந்த கஹந்தகம மறுத்துள்ளார்.
நான் அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு மாநகர சபைக்கு வந்தேன், அதன் பின்னரே சபையில் இருந்து வெளியில் வந்த நான் தாக்கப்பட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் தாம் தாக்கப்பட்டதாகவும், அங்கு யாரோ ஒருவர் தனது கையில் 69 என்ற இலக்கத்தை ஒட்டியதாகவும் மஹிந்த கஹந்தகம குற்றம் சுமத்தியுள்ளார்.