வத்தளை கதிரான பாலத்தின் மீது களனி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 42 வயதுடைய தாயொருவர் பிரதேசவாசிகள் பெண்ணின் உயிரைக் காப்பாற்றியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இடுப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக குழந்தையை வாழ வைத்து பணம் சம்பாதிக்க முடியாத நிலையிலேயே இந்த தீர்மானத்தை எடுத்ததாக தாயார் விசாரணையின் போது தெரிவித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போன குழந்தையை தேடும் பணியில் பொலிஸ் உயிர்காக்கும் படையினரும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.