அனைத்து கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய மக்கள் இயக்கம் உருவாக்கப்பட வேண்டுமென மாத்தறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாட்டைப் பொறுப்பேற்று வழிநடத்த இளைஞர்கள் தயாராக இருந்தால் அதற்கு ஆதரவளிக்கத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.