கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைகருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததன் பின்னர் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை மீண்டும் ஆரம்பிக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.