இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 51 பேரை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இது இடம்பெற்றுள்ளது.
கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்களில் 41 ஆண்களும், 05 பெண்களும், 05 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும், இதில் மனித கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் உள்ளடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை மாரவில பிரதேசத்தில் கடற்படையினர், கரையோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 08 ஆண்கள், 06 பெண்கள், 10 சிறுவர்கள் உட்பட 24 பேருடன் அவர்கள் தங்கியிருந்த விடுதியின் உரிமையாளர் அந்த பகுதியில் உள்ள லாட்ஜில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக இடம்பெயரத் தயாராக இருந்த குழுவாக சந்தேகிக்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு, வலச்சேனை மற்றும் ஹலவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மாரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.