இலங்கையில் வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக இலங்கை மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையால் பலரது வாழ்வாதாரமும் ஆபத்தில் உள்ளதாகவும், உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக குடும்ப உறுப்பினர்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைக்க வேண்டியுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
உணவுப் பணவீக்கத்தைக் கணக்கிடுவதில் நிபுணரான பொருளாதார நிபுணர் ரெஹானா தவ்பீக், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட சத்தான உணவை உண்பதற்காக இலங்கை குடும்பம் மாதம் ஒன்றுக்கு 93,675 முதல் 148,868 ரூபாய் வரை வருமானம் ஈட்ட வேண்டும் என்று Reuters இடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இலங்கை குடும்பம் ஒன்றின் சராசரி வருமானம் மாதாந்தம் 76,414 ரூபா எனவும், இலங்கை சனத்தொகையில் 20 வீதமான வறிய குடும்பத்தின் மாத வருமானம் 17,572 ரூபா எனவும் உத்தியோகபூர்வ தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.