நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, கையடக்கத் தொலைபேசிகளில் பெறப்படும் குறுஞ்செய்திகளுக்கு (SMS) எரிபொருளைப் பெற்றுக் கொள்ளுமாறு அல்லது அதற்குப் பதிவு செய்யுமாறு மக்களிடம் கூறி அவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதாகவும் இவ்வாறான போலியான பதிவு தளங்களில் உள்நுழையாமல் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு கேட்டுக்கொள்கின்றது.
மேலும் அறிக்கையில், ஒழுங்கமைக்கப்பட்ட குறித்த குற்றவாளிகள் மொபைல் போன்களுக்கு இதுபோன்ற செய்திகளை அனுப்புவதன் மூலம் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்க முயற்சி செய்கிறார்கள் என்பதினை செயற்படுமாறும் கேட்டுக்கொள்கின்றார்கள்.
எனவே, நீங்கள் பெறும் இவ்வாறான போலியான செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதில் மன்றம் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றது.
இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு கீழே: