இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யூரியா உரத்தை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்கு மேலதிக எரிபொருளை வழங்குமாறு விவசாய அமைச்சு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுவரை சுமார் 1500 மெற்றிக் தொன் யூரியா உரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார். மேலும் 20,000 மெட்ரிக் தொன் விநியோகிக்கப்படவுள்ளதாக விவசாய செயலாளர் தெரிவித்துள்ளார்.
உரக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெறப்படும் எரிபொருள், உரத்தை உடனடியாக விநியோகிக்க போதுமானதாக இல்லை என விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எத்தனை திட்டங்களை வகுத்தாலும் எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டால் உணவு நெருக்கடியை தடுக்கும் வேலைத்திட்டம் தோல்வியடையலாம் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹன புஸ்பகுமார மேலும் சுட்டிக்காட்டினார்.