எதிர்வரும் திங்கட்கிழமை (25) முதல் மறு அறிவித்தல் வரை வாரத்தின் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய 3 நாட்களிலும் பாடசாலைகள் வழமையான நேரங்களில் மாத்திரம் நடத்தப்பட வேண்டுமென கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பாடசாலைகள் நடைபெறாத புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாணவர்களுக்கு வீட்டிலிருந்து கற்றல் செயற்பாடுகள் வழங்கப்பட வேண்டும் அல்லது இணையத்தில் கற்பித்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
பள்ளிகளை தொடங்கவும், நடத்தவும் கல்வி அமைச்சகம் தொடர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.