ரணில் விக்ரமசிங்க 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அங்கத்தவர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாகவும், இன்று முதல் அந்த இராஜினாமா அமுலுக்கு வரும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடிதம் மூலம் தமக்கு அறிவித்துள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வென்றது. அதற்காக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.