அரச அலுவலகங்களுக்கு அதிகாரிகளை அழைப்பதை கட்டுப்படுத்துவது குறித்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அரசாங்க அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை அழைப்பதைக் கட்டுப்படுத்தும் முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் விதிகள் நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு 24.07.2022 அன்று முதல் ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாகும்.
உரிய சுற்றறிக்கைகளை தவறாகப் பயன்படுத்தி சேவைக்கு அறிக்கையிடும் அதிகாரிகள் சேவைக்கு அறிக்கை செய்யாத சூழ்நிலை ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அது சுட்டிக்காட்டுகிறது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள தொடர்புடைய சுற்றறிக்கையில், அத்தியாவசிய பொது சேவைகளை நடத்துவதற்கு தேவையான பணிக்குழுவை அழைப்பதற்கும், செய்யக்கூடிய கடமைகளுக்கும் இந்த சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் தடையாக இல்லை என்றும் கூறுகிறது.