அனைத்து உப தபால் அலுவலகங்களையும் நாளை (28) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
தற்போதுள்ள போக்குவரத்து சிரமங்களைக் கருத்தில் கொண்டு இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. .
எவ்வாறாயினும், ஏனைய தபால் அலுவலக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என்று தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.