மின் கட்டண அதிகரிப்பு காரணமாக எதிர்காலத்தில் மின் தேவை மேலும் குறையலாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளாந்த மின்சார பாவனை ஏற்கனவே 25 வீதத்தால் குறைந்துள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத பட்சத்தில் இன்னும் 04 மாதங்களுக்கு 03 மணித்தியாலங்களுக்கு குறைவான மின்சாரத்தை துண்டிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.