பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் காரணமாக புதன்கிழமை (11) நடைபெறவிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே விசேட பாராளுமன்ற அமர்வு கூட்டப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதியிடம் இன்று முற்பகல் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றம் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.