இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அறிக்கை
சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருவதை உயர் ஸ்தானிகராலயம் சமீபத்தில் கவனித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த குறித்த காரியாலயம் இவையாவும் போலியானவை மற்றும் அப்பட்டமான தவறான அறிக்கைகளாகும்,இவ்வாறு எந்த உண்மையும் இல்லாத போலியான செய்திகளை பரப்பும் ஊடகங்களையும் சமூக ஊடக பயனாளர்களை பார்த்து மன வேதனை அ டைவதாகவும் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.