இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் அரசாங்க ஊழியர்களை வீட்டில் இருந்தவாறு பணியாற்றுகின்ற நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
இவ்நடைமுறையின் அடிப்படையில் வீட்டிலிருந்த பணியாற்றுவோருக்கான சம்பளங்கள் குறைக்கப்படும் என்று பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களினுடைய செயலாளர் ரத்னசிறி கூறியுள்ளார்.
அரச உத்தியோகத்தர்களினை அழைப்பதினை கட்டுப்படுத்த முன்வந்து இவ்வாறான சம்பளக் குறைப்புக்காக இணங்குவார்களானால் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளோம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
குறித்த சம்பளத்தில் பணிக்கு வருகின்றவர்களுக்கும், எந்தவித செலவுகளுக்குமின்றி வீட்டில் இருந்து வேலைகளை செய்யம் நபவர்களுக்கும் ஒரே அளவிலான சம்பளங்களை வழங்குவது நியாயமற்றது எனவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலகின்ற எரிபொருள் தட்டுப்பாடுகளின் காரணமாக அரச ஊழியர்களினை பணிகளுக்கு அழைப்பது தொடர்பான பல யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாக்கும்.