இலங்கையைச் சேர்ந்த 22 இளைஞர்கள் ஜப்பானில் வேலை வாய்ப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அந்த தொழிலாளர்களுக்கான விமான டிக்கெட்டுகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று (20) வழங்கப்பட்டது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் IM ஜப்பான் இணைந்து ஜப்பானில் இலங்கையர்களுக்கு இலவச வேலைகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இத்திட்டம் இயங்குகிறது.
இதன் கீழ் 14 இளைஞர்கள் கட்டுமானத் துறையிலும், 8 இளைஞர்கள் செவிலியர் துறையிலும் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர்.