முதலில் எரிபொருள் வரிசைகளை குறைக்க வேண்டும், இரண்டாவதாக எரிபொருள் வரிசையை நீக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நபரும் அமைதியான போராட்டங்களை முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் புஷ்பிகா டி சில்வா இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.