இங்கிலாந்தில் வசிக்கின்ற இலங்கையர்களால் லண்டனிலும் கோட்டா கோ கம என்கின்ற கிளை ஒன்றினை ஸ்தாபித்துள்ளர்கள். லண்டனில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பின்புறமாக உள்ள அதன் சுற்று வட்ட பகுதியில் அவர்கள் இந்த கோட்டா கே ம கிராமத்தினுடைய கிளையினை உருவாக்கியுள்ளனர்.
லண்டனில் கோட்டா கோ கமவானது தற்போது திறக்கப்பட்டிருக்கின்றது என பியல் பெரேரா என்கின்ற நபர் தனது முகநூல் பக்கத்தினில் புகைப்படம் ஒன்றினை பதிவேற்றம் செய்து குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையினுடைய கொழும்பு காலிமுகத் திடலில் கோட்டா கோ கம (கோட்டா வெளியேறு கிராமம்) என்கின்ற கிராமம் என்று பெயரிட்டு, போராட்டகாரர்களினால் போராட்டம் களம் ஒன்றை அமைதிருக்கின்றார்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர்களின் அரசாங்கத்தினை பதவி விலகுமாறு கோரி கடந்த 22 நாட்களாக காலிமுகத திடலில் இளைஞர்,யுவதிகளுடைய தலைமையில் பல போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த போராட்டத்திற்கான ஆதரவாக இலங்கையிலுள்ள பல இடங்களிலும் கோட்டா கோ கம கிளைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வெளிநாடான இங்கிலாந்திலும் இலங்கையர்கள் ஒன்று சேர்ந்து கோட்டா கோ கம என்கின்ற இன்னும்மொரு கிளையினை திறந்திருக்கின்றார்கள்.
மேலும் இலங்கையில் மாத்திரமல்லது இங்கிலாந்து மற்றும் இத்தாலி, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் இலங்கையினுடைய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறமை இங்கு குறிப்பிடதக்கதாகும்.