இடைக்கால அரசாங்கமொன்றினை அமைப்பதற்காக பல நடவடிக்கைகளினையும் முன்னெடுப்பதற்காக 11 கட்சிகளைக் கொண்ட ஐந்து பிரதிநிதிகளினை நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
பாராளுமன்றத்தினில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்திருந்த 5 பாராளுமன்ற உறுப்பினர்களை அடங்கிய குழுவொன்றினை மற்றைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி அவர்களினுடைய ஆதரவைப் பெறுவதற்காக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இதன்படி, நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் டிரன் அலஸ் ஆகியோர் பிரதிநிதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த விடையம் தொடர்பில் தனது கருத்தினை தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராணரான ஜயந்த சமரவீர, இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பாக சுயேச்சை எம்பிக்களுடன் ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் தாம் கலந்துரையாடி வருவதாகவும், அதற்கான செயற்பாடுகளை தாம் துரிதப்படுத்துவதற்காகவே குறிப்பிட்ட இந்த குழு நியமிக்கப்பட்திருப்பதாகவும் குறிப்பிடடார்.
“எமது நாடாளுமன்றக் குழுவில் உள்ள இந்த ஐந்து உறுப்பினர்களும் இந்தப் பணியில் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம். இந்த விடயமாக ஜனாதிபதியவர்களும் இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதால், மேற்படி புதிதாக அமைக்கப்படுகின்ற அரசாங்கமானது தேசிய ஒருமித்த அரசாங்கம் என்று பெயரிடப்பட வாய்ப்பிருப்பதாகவும்” அவர் மேலும் கூறினார்.