முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஊழலுக்கு எதிரான குரல் அழைப்பாளர் வசந்த சமரசிங்க ஆகியோர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான குரல் அமைப்புடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது ராஜபக்ச குடும்பம், அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் தொடர்புடைய பாரிய ஊழல்களை அம்பலப்படுத்தினார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது குடும்பத்தினரும் பயனடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க மற்றும் ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரும் மத்திய வங்கி பிணைமுறி மோசடியாளர்களிடம் பணம் பெற்றுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமீர டி சில்வா, இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை மற்றும் பொய்யானவை என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பல்வேறு ஆணைக்குழுக்களை நிறுவி இலங்கையின் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று பிணைமுறி மோசடியின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்த முன்னாள் ஜனாதிபதி கடுமையாக உழைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.