பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து தான் ராஜினாமா செய்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதிப்படுத்தியுள்ளார்.
புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை (05) நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நெருக்கடியின் போது நடைபெறும் முதல் வாக்கெடுப்பு இதுவாகும். பாராளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை அறியும் வாய்ப்பையும் இது உருவாக்கும்.
துணை சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பும் வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.