போராட்டக்காரர்களினை கைது செய்த குறித்த பொலிஸ் அதிகாரிகளினை விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக இலங்கையின் மனித உரிமைகள் ஆணையம் (HRCSL) அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்தினுடைய சுற்றுவட்டத்திற்குள் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 12 பேர் கைது செய்யப்பட்திருந்தனர்.
குறித்த இந்த நிலைமையில், இது சம்பந்தமாக குறிப்பிட்டுள்ள இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL), குடிமகக்களுடைய அடிப்படை உரிமையாகிய பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்குமாறும் அதுமட்டுமல்லாது அமைதியான போராட்டங்களினை நசுக்க மாட்டோம் என்பதினை எமக்கு உறுதிப்படுத்துமாறும் இது சம்பந்தமாக பொலிஸாருக்கு வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கின்றது.
14(1) (அ) பிரிவின் கீழ், பாராளுமன்ற உறுப்பினர்களை விமர்சித்து பேசுதல் மற்றும் பொதுமக்கள் தமது கருத்துக்களை சொலவதற்குரிய சுதந்திரத்தை அனுமதிக்கின்றது . என்பதினை அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஐஜிபி அவர்கள் உரிய வழிகாட்டுதல்களினையும் அறிவுறுத்தல்களினையும் வழங்கியாக வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது.