எனக்கு இந்த நிலை வருவதற்கு ஊழல் நிறைந்த அமைச்சர்களே காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்ததாக தகவலொன்று வெளியாகியுள்ளது.
எனக்கு நல்லதொரு தொலைநோக்கும், நாட்டினை கட்டியெழுப்பும் திட்டமும் இருந்த போதிலும் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் சூழ் நிலை உருவாகி விட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளச்செய்தியில் அமைச்சரவையில் இருந்த ஊழல் நிறைந்தவர்களின் காரணமாகவே தான் என்னால் எந்தவிடையத்தினையும் வெற்றிகரமாகச் செய்ய இயலாமல் போனதாக ஜனாதிபதி தெரிவித்ததாக மேற்க்கோள் கட்டி செய்தியினை வெளியிட்டிருக்கின்றது.
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் பொறுப்பேற்று உடனே பதவி விலக வேண்டும் என மக்கள் ஆர்ப்பட்ட்ங்களினை நாடுபூராகவும் நடத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடவிடையமாகும்.