கட்சி சார்பற்ற அரசாங்கத்தை அமைப்பதற்கு தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சமகி ஜன பலவேவ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் இணைத்து கட்சி சார்பற்ற அரசாங்கத்தை அமைத்து நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்வதற்கான மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகவே தாம் இந்த தருணத்தில் பிரதமர் பதவியை பொறுப்பேற்றதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே, சஜித் பிரேமதாச தேசிய பொறுப்பாக கட்சி சார்பற்ற அரசாங்கத்தை அமைப்பதில் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.