கோத்தாகோகம போராட்டத்தின் செயற்பாட்டாளர்கள் நேற்று (05) தமது செயற்திட்டத்தை வெளியிட்டுள்ளனர்.
போராட்டத்தின் செயல்பாட்டாளர்களினால் 6 திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவை மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட அரச நிறுவனங்களின் தலைவர்கள் இராஜினாமா செய்யவேண்டும்.
கோட்டா – ரணில் அரசாங்கம் வெளியேறியதன் பின்னர் மக்கள் போராட்டத்தின் பொருளாதார, சமூக, அரசியல் இலக்குகள் மற்றும் நோக்கங்களுக்கு ஏற்ப, மக்கள் நலனை ஸ்தாபிக்க வேண்டும் என்பது போராட்டத்தின் செயல்திட்டத்தின் மற்றுமொரு பகுதி. அந்த இடை-அரசுக்குள் இணைவதற்கான மக்கள் போராட்டத்தின் பிரதிநிதிகளுக்கான சபை ஒன்றினையும் உருவாக்க வேண்டும்.
இடைக்கால ஆட்சிக் கட்டமைப்பை அதிகபட்சமாக 12 மாதங்களுக்கு மட்டுப்படுத்த வேண்டும் என்றும் அது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துடன் முடிவுக்கு வர வேண்டும் என்றும் போராட்டத்தின் செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.