ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகுமாறு கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், ஜனாதிபதி பதவியை ஏற்று அனைத்துக் கட்சி ஆட்சியை அமைக்குமாறு கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற அவசர கட்சித் தலைவர் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.