ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் பொய்யானவை என தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் ஒன்றிற்கு அருகில் பல சொகுசு கார்கள் செல்லும் காணொளியை வெளியிட்டு ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறுவதாக சமூக ஊடகங்கள் நேற்று வெளியிடப்பட்டிருந்தன.
எனினும் இது தொடர்பில் நங்கள் மேற்கொண்ட விசாரணையில், இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, தனது விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி வந்திருந்த விமானம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அவருடன் செல்வதற்காக பல வாகனங்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் வந்ததாகவும் அதன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதாகவும் எமக்கு மேலும் தெரியவருகின்றது.