இன்று கொழும்பிற்கு ரயில்கள் எதுவும் இயக்கப்படாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கொழும்பு கோட்டை மற்றும் மருதானை நிலையங்களில் இருந்து சில புகையிரதங்கள் இன்று இயங்கும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்புக்கு வரும் மக்கள் இடையூறுகள் இன்றி பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பதில் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன், நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துமாறு முப்படையினருக்கும் பதில் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.